டேங்கர் லாரியில் இறந்தநிலையில் இருந்த டிரைவர்


டேங்கர் லாரியில் இறந்தநிலையில் இருந்த டிரைவர்
x

டேங்கர் லாரியில் இறந்தநிலையில் இருந்த டிரைவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த உப்புப்பேட்டை அருகே முப்புதருக்குள் பால் டேங்கர் லாரி ஒன்று நிற்பதாக அப்பகுதி மக்கள் ஆற்காடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று பார்த்தபோது டேங்கர் லாரியில் டிரைவர் இறந்த நிலையில் இருந்தார். அவர் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ஆதார் அட்டையை வைத்து அவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்த குமரேசன் (வயது 40) என்பதை கண்டுபிடித்தனர்.

விசாரணையில் சேலத்தில் இருந்து காஞ்சீபுரம் மாவட்டம் வெள்ளைகேட் அருகே உள்ள பால் கம்பெனிக்கு டேங்கர் லாரி மூலம் பால் ஏற்றி வந்தது தெரியவந்தது. அப்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் குமரேசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story