கூடுதல் விலை கேட்ட டாஸ்மாக் ஊழியரை பாட்டிலால் தாக்கிய விவசாயி..!


கூடுதல் விலை கேட்ட டாஸ்மாக் ஊழியரை பாட்டிலால் தாக்கிய விவசாயி..!
x

கோப்புப்படம்

தர்மபுரி அருகே கூடுதல் விலை கேட்ட டாஸ்மாக் ஊழியரை பாட்டிலால் தாக்கிய விவசாயி உட்பட இருவர் மீது வழக்குப்பதிவு.

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே சனி சந்தை கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் பாளையம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பழனிசாமி (வயது 48) என்பவர் மதுபாட்டில் வங்குவதற்க்காக நேற்று வந்துள்ளார்.

அப்போது சம்மந்தந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வரும் பாளையம்புதுார் கிராமத்தை சேர்ந்த சிவகுமார் (40) என்பவர், விவசாயி பழனிசாமியிடம் பாட்டிலுக்கு கூடுதல் விலை கேட்டதால், விற்பனையாளர் சிவகுமார் மற்றும் பழனிசாமி இடையே வாக்குவாதம் மற்றும் மோதல் ஏற்பட்டது.

இதில் ஒருவரை ஒருவர் மதுபாட்டில் மூலம் தாக்கியதில், டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் விவசாயி பழனிசாமி இருவருக்கும் காயம் ஏற்பட்டது. காயம் ஏற்பட்ட இருவரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இருதரப்பிலும் கொடுத்த புகாரின் பேரில் டாஸ்மாக் ஊழியர் சிவக்குமார் மற்றும் விவசாயி பழனிசாமி ஆகியோர் மீது தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.


Related Tags :
Next Story