கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி


கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி
x

வடலூரில் மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

வடலூர்,

வடலூர் கோட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் மனைவி சரஸ்வதி (வயது 55). இவர் நேற்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் குதித்து விட்டார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி வடலூர் போலீசாருக்கும், குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 50 அடி ஆழம் கொண்ட கிணற்றில் இறங்கி கயிறு மூலம் சரஸ்வதியை மீட்டதோடு, கிணற்றுக்குள் குதித்ததில் காயமடைந்த அவரை சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து வடலூர் போலீசார் நடத்திய விசாரணையில், குடும்ப பிரச்சினை காரணமாக சரஸ்வதி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. 50 அடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.


Next Story