பிம்பத்தை கண்டு கண்ணாடியை கொத்திய மயில்


பிம்பத்தை கண்டு கண்ணாடியை கொத்திய மயில்
x

பிம்பத்தை கண்டு கண்ணாடியை மயில் கொத்தியது.

திருச்சி

மணப்பாறை:

தோகை விரித்தாடும் மயிலின் அழகு, காண்பவர்களின் மனதை மயக்குவதாக இருக்கும். இந்நிலையில் மணப்பாறை மதுரை ரோட்டில் ஒரு தனியார் மண்டபத்திற்கு பறந்து வந்த மயில் ஒன்று அங்கிருந்த கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்தது. அடுத்தகணம் அந்த மயில், தனக்கு போட்டியாக வேறொரு மயில் வந்துவிட்டதாக நினைத்து, அந்த கண்ணாடியை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொத்திக்கொண்டே இருந்தது. கடைசியில் சோர்வடைந்த அந்த மயில் அங்கிருந்து பறந்து சென்றது.


Next Story