பெண்ணை அவதூறாக பேசியவர் கைது


பெண்ணை அவதூறாக பேசியவர் கைது
x

விக்கிரமசிங்கபுரம் அருகே பெண்ணை அவதூறாக பேசியவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). இவரும், அவருடைய மனைவியும் மூன்று விளக்கு பஸ்நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சேர்வலாறு பகுதியை சேர்ந்த மாடசாமி (29) என்பவர் மோட்டார் சைக்கிளில் இடிப்பது போல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சுரேஷ், மாடசாமியை மெதுவாக பார்த்து செல்ல வேண்டியது தானே என கூறியுள்ளார். அதற்கு மாடசாமி, சுரேசையும் அவருடைய மனைவியையும் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துச் சென்றார். இதுகுறித்து சுரேஷ், விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் முருகேஷ் விசாரணை நடத்தி மாடசாமியை கைது செய்தார்.


Related Tags :
Next Story