முதியவர் திடீர் சாவு


முதியவர் திடீர் சாவு
x

முதியவர் திடீரென பரிதாபமாக இறந்தார்.

கரூர்

நொய்யல்,

கந்தம்பாளையம் அருகே அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 65).இவர் டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 5-ந்தேதி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தவர்களிடம் தனக்கு வயிற்றுவலி அதிகமாக இருந்ததாகவும் அதனால் வீட்டில் இருந்த மாத்திரையை சாப்பிட்டதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து மணியை உடனடியாக சிகிச்சைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மணியின் மகள் மகேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story