உண்டியல் காணிக்கை எண்ணும் பணி


உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
x

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

விருதுநகர்

சாத்தூர்

சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் ேகாவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.55 லட்சத்து 5 ஆயிரத்து 70-ம், தங்கம் 231.650 கிராமும், வௌ்ளி 1,386.900 கிராமும் கிடைத்தது. காணிக்கை எண்ணும் பணியில் சாத்தூர், மதுரை, துலுக்கப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஓம்சக்தி பக்தர்கள் குழு, அய்யப்ப சேவா சங்கம், கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்து அறநிலைய துறை விருதுநகர் கோவில்களின் உதவி ஆணையர் வளர்மதி, இருக்கன்குடி கோவில் ஆணையர் கருணாகரன் தலைமையில் பரம்பரை அறங்காவலர் தலைவர் ராமமூர்த்தி மற்றும் அறங்காவலர் குழுவினர், ஆய்வாளர்கள் ஆகிேயார் பார்வையிட்டனர்.



Next Story