வாலிபருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை


வாலிபருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை
x

வாலிபருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

அரியலூர்

தாமரைக்குளம்:

சிறுமியை கடத்தினார்

அரியலூர் சடையப்பர் தெருவை சேர்ந்தவர் ஆராமிர்தம். இவரது மகன் மாரிமுத்து (வயது 21). இவர் கடந்த 13.10.2018-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அந்த சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், இது குறித்து அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 14.10.2018 அன்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

17 ஆண்டுகள் சிறை

இது தொடர்பான வழக்கு அரியலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி ஆனந்தன் தீர்ப்பு கூறினார். இதில், சிறுமியை கடத்திச் சென்ற குற்றத்துக்காக மாரிமுத்துவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், போக்சோ சட்டத்தில் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் என மொத்தம் 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டார்.

இதையடுத்து மாரிமுத்துவை சிறையில் அடைப்பதற்காக கோர்ட்டில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ேபாலீசார் அழைத்து சென்றனர்.


Next Story