மின்சார வாரியத்துக்கு சொந்தமான ரூ.40 லட்சம் பித்தளை கம்பிகள் திருட்டு


மின்சார வாரியத்துக்கு சொந்தமான ரூ.40 லட்சம் பித்தளை கம்பிகள் திருட்டு
x

மின்சார வாரியத்துக்கு சொந்தமான ரூ.40 லட்சம் பித்தளை கம்பிகளை மர்மநபர்கள் திருடிச் சென்று விட்டனர்.

திருவள்ளூர்

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள குஞ்சலம் கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை தொடங்குவதற்காக மின்சாதன பொருட்கள் அங்கு குவிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இதில் 2 டன் எடையுள்ள ரூ.40 லட்சம் மதிப்புள்ள பித்தளை கம்பிகள் மாயமானதாகவும், அதை மர்மநபர்கள் திருடிச் சென்று விட்டதாகவும் மின்சார வாரிய பொறியாளர் கிருஷ்ணகுமார் பென்னலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக பென்னலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story