வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

நெல்லையில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு சி.என்.கிராமம், லட்சுமிபுரம் மேல தெருவைச் சேர்ந்தவர் உடையார் என்ற மாமரத்து உடையார் (வயது 34). இவர் அடி, தடி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தாழையூத்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் விஷ்ணு ஏற்று அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து உடையார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவை பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் நேற்று இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை வழங்கினார்.


Next Story