மது விற்ற பெண் கைது


மது விற்ற பெண் கைது
x

மது விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

ஆண்டிமடம்:

ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சைமணி தலைமையிலான போலீசார், திராவிடநல்லூர் பகுதியில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் மது விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் நடத்திய சோதனையில் ஒரு பெண் வீட்டில் பதுக்கி வைத்து மது விற்றது தெரியவந்தது. விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த அன்பழகனின் மனைவி பழனியம்மாள்(வயது 39) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 16 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story