கட்டிட மேஸ்திரி வீட்டில் 5½ பவுன் நகை திருட்டு


கட்டிட மேஸ்திரி வீட்டில் 5½ பவுன் நகை திருட்டு
x

திருவெண்ணெய்நல்லூரில் கட்டிட மேஸ்திரி வீட்டில் 5½ பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர் வெண்ணெய் வேலவர் கோவில் தெருவில் வசித்து வருபவர் ரவி (வயது 50). கட்டிட மேஸ்திரியான இவர் நேற்று மதியம் வீட்டை பூட்டி விட்டு, அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 5½ பவுன் நகைகளை காணவில்லை. ரவி வெளியே சென்றதை நோட்டமிட்ட மர்மநபர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகைகளை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story