கோவிலில் உண்டியல் திருட்டு


கோவிலில் உண்டியல் திருட்டு
x

கோவிலில் உண்டியல் திருட்டுபோனது.

பெரம்பலூர்

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கல்லை கிராமத்தில் முத்தையாளம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கோவில் பூசாரி பூஜைகளை முடித்து கோவிலை பூட்டிவிட்டு சென்றனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் அவர் கோவிலுக்கு வந்தபோது, கோவிலின் முன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியலை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இந்த கோவிலின் உண்டியல் சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய பணம் உள்ளிட்ட காணிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டதால், உண்டியலில் குறைந்த அளவிலான பணம் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதேபோல் கல்லை அருகே கொப்பாட்டி அம்மன் கோவில் கதவை உடைத்து உள்ளே இருந்த உண்டியலை மர்ம நபர்கள் திருட முயன்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.


Next Story