கோவில்பட்டி கோவிலில் தேய் பிறை அஷ்டமி பூஜை


கோவில்பட்டி கோவிலில் தேய் பிறை அஷ்டமி பூஜை
x
தினத்தந்தி 23 May 2022 10:14 AM GMT (Updated: 23 May 2022 10:27 AM GMT)

கோவில்பட்டி கோவிலில் தேய் பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது.

இதனையொட்டி காலை 7 மணிக்கு கோவில்நடை திறக்கப்பட்டது. பின்னர் சங்கல்பம், கணபதி பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து காலபைரவருக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டாரப் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story