திரவுபதி அம்மன் கோவில் குடமுழுக்கு
கீழ்வேளூர் அருகே திரவுபதி அம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது.
நாகப்பட்டினம்
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே தேவூர்- இரட்டை மதகடி சாலையில் திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் குடமுழுக்கு நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜையுடன், கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை, பூர்வாங்க பூஜைகள் உள்ளிட்டவை நடைபெற்றது. இதை ெதாடர்ந்து கடங்கள் புறப்பாடாகி கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. பின்னர் அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.இதேபோல கீழ்வேளூர் அருகே இருக்கை கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் குடமுழுக்கு நடைபெற்றது
Related Tags :
Next Story