மல்லிகார்ஜூன சாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்


மல்லிகார்ஜூன சாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
x
தினத்தந்தி 2 Dec 2022 7:30 PM GMT (Updated: 2 Dec 2022 7:31 PM GMT)

தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூன சாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

தர்மபுரி

தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜூன சாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி சாமிக்கு பால், சந்தனம், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மற்றும் பல்வேறு வகையான பழங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை மற்றும் வழிபாடு நடந்தது. பின்னர் மேளதாளங்கள் முழங்க கோவில் வளாகத்தில் வரிசை அழைப்பு நிகழ்ச்சி நடந்தது.

பின்னர் கோவில் பந்தலில் மல்லிகார்ஜூன சாமி- கல்யாண காமாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. பல்வேறு உபகார பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. சாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், மாங்கல்ய கயிறு, வளையல் உள்ளிட்ட சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ராஜகோபால், கோவில் அர்ச்சகர் செல்வ முத்துக்குமாரசாமி மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்.


Next Story