பூமாயி அம்மன் கோவிலில் மஞ்சள் பூசும் விழா


பூமாயி அம்மன் கோவிலில் மஞ்சள் பூசும் விழா
x

பூமாயி அம்மன் கோவிலில் மஞ்சள் பூசும் விழா நடந்தது.

சிவகங்கை

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோவிலில் நேற்று அம்மியில் மஞ்சள் அரைத்து அம்மனுக்குச் சாற்றும் விழா நடைபெற்றது.விழாவையொட்டி ஏராளமான பெண்கள் பகுதிபகுதியாக காலை 8 மணியில் இருந்து அம்மியில் மஞ்சள் அரைக்க ஆரம்பித்தனர். 100-க்கும் மேற்பட்ட பெண்கள் இதில் கலந்துகொண்டனர். காலை 11 மணிஅளவில் உற்சவ அம்மனுக்கு அம்மியில் அரைத்த மஞ்சள் சாத்தப்பட்டு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அம்மன் மேல்பூசப்பட்ட மஞ்சள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கபட்டது. வெள்ளிக்கிழமை வரலெட்சுமி நோன்பு விரதம் என்பதால் கோவிலில் திரளான அளவில் கூடிய பெண்கள் நெய்விளக்கேற்றியும் மஞ்சள் அரைத்தும் அம்மனை வழிபட்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை வசந்த பெருவிழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story