தமிழகத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா பாதிப்பு


தமிழகத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா பாதிப்பு
x

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது.கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தமிழகத்தில் இன்று 31 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 4 பேர் உள்பட மொத்தம் 14 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 24 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.

ஆஸ்பத்திரியில் 164 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது 353 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


Next Story