தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 30-க்கும் கீழ் குறைந்தது


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 30-க்கும் கீழ் குறைந்தது
x

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 30க்கும் கீழ் பதிவாகியுள்ளது.

சென்னை,-

தமிழகத்தில் இன்று புதிதாக 15 ஆண்கள், 14 பெண்கள் உள்பட மொத்தம் 29 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 5 பேர் உள்பட மொத்தம் 11 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. நாமக்கல், நீலகிரி, தென்காசி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.

மேலும், 12 வயதுக்குட்பட்ட 10 குழந்தைகளுக்கும் , 60 வயதுக்கு மேற்பட்ட 5 முதியவர்களுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் 155 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது 320 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


Next Story