சிதம்பரம் நடராஜர் கோவிலில் 16-வது நாளாக இன்று ஆய்வு


சிதம்பரம் நடராஜர் கோவிலில் 16-வது நாளாக இன்று ஆய்வு
x

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலையத்துறை சார்பில் இன்று 16-வது நாளாக ஆய்வு பணிகள் நடைபெற்றது.

கடலூர்,

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி உள்ளிட்ட சாமிகளுக்கு ஏராளமான தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகள் உள்ளன. இந்த நகைகள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சரிபார்க்கப்பட்டு, ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

கோவிலில் உள்ள பழமை வாய்ந்த தங்க நகைகள் குறித்து 2005-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல், 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 17 ஆண்டுகளுக்கான கணக்கு விவரங்கள் சரிபார்க்கப்பட்டது. அதன் அறிக்கை தயாரிக்க கடந்த 16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 4 நாட்களுக்கு ஆய்வு பணிகள் நிறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த 20-ந்தேதி முதல் மீண்டும் ஆய்வுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவிலில் உள்ள பழமையான தங்க நகைகள், வைடூரியங்கள், பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் குறித்து கடலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற ஆய்வின் போது 2019 ஏப்ரல் முதல் 2020 ஜூன் வரையிலான 15 மாத கணக்குகள் சரிபார்க்கப்பட்டன. அதைத் தொடர்ந்து இன்று 16-வது நாளாக சிதம்பரம் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.


Next Story