சேலத்தில் வியாபாரிகள் தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம்
ஏற்காட்டில் சாலையோர கடைகளுக்கு அனுமதிகேட்டு சேலத்தில் வியாபாரிகள் தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்
சேலம் மாவட்ட சாலையோர விற்பனையாளர்கள் சங்கத்தினர் நேற்று நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க மாவட்ட தலைவர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வரதராஜன் வரவேற்றார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் உதயகுமார் முன்னிலை வகித்தார். இதில் ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில் சாலையோரம் மீண்டும் கடை வைக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். இதில் சாலையோர வியாபாரிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைககள் குறித்து கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story