மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து - வாலிபர் உயிரிழப்பு


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து - வாலிபர்  உயிரிழப்பு
x

செங்குன்றம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை

செங்குன்றத்தை அடுத்த கண்ணம்பாளையம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் நந்தன். இவருடைய மகன் தமிழன் (வயது 22). இவர் கல்லூரி பட்டப்படிப்பு முடித்துவிட்டு வடகரையிலுள்ள ஒரு ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் வேலை செய்து வந்தார்.

நேற்று இவரும் இவரது பெண் நண்பர் தீபிகா என்பவரும் மோட்டார் சைக்கிளில் செங்குன்றத்தை அடுத்த லட்சுமிபுரம் அருகே சாலை ஓரமாக நின்று பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது மீஞ்சூரில் இருந்து வண்டலூர் நோக்கி வந்த லாரி இவர்கள் இருந்த மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.

இதில் சம்பவ இடத்திலேயே தமிழன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் பலத்த காயங்களுடன் இருந்த தீபிகாவை ஆவடியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உயிரிழந்த தமிழனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் உமேஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story