வேன் மோதி தொழிலாளி சாவு


வேன் மோதி தொழிலாளி சாவு
x

திருவலத்தில் வேன் மோதி தொழிலாளி உயிரிழந்தார்.

வேலூர்

வேலூர் மாவட்டம், திருவலம் அருகே உள்ள எஸ்.என்.புதூர் பகுதியை சேர்ந்தவர் வாசு (வயது 60), கூலி தொழிலாளி. இவர் ஏரந்தாங்கல் பகுதியில் இருந்து சென்னை -சித்தூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். ஏரந்தாங்கல் ஏரி அருகே வரும்போது, கோழி ஏற்றி வந்த வேனின் முன்புற டயர் வெடித்து, நிலை தடுமாறி நடந்து சென்ற வாசுவின் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த திருவலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story