வெண்ணைமலை துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


வெண்ணைமலை துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

வெண்ணைமலை துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

கரூர்

வேலாயுதம்பாளையம்,

காதப்பாறை ஊராட்சி, வெண்ணைமலையில் உள்ள சபரீசன் சித்தாஸ்ரமம் வளாகத்தில் துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் காமாட்சி விநாயகர், பாலமுருகன், காலபைரவர், சித்தநந்திகேஸ்வர் ஆகிய பரிவார தெய்வகங்களும் உள்ளன. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை உள்பட பல்வேறு யாக பூைஜகள் நடந்தன.

தொடர்ந்து நேற்று காலை யாகசாலையில் வைக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் துர்க்கை அம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீைர ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.


Next Story