கார் மோதி கிராம உதவியாளர் பலி


கார் மோதி கிராம உதவியாளர் பலி
x

திண்டிவனம் அருகே கார் மோதி கிராம உதவியாளர் பலி

விழுப்புரம்

திண்டிவனம்

திண்டிவனம் அருகே உள்ள சாரம் கிராமத்தை சேர்ந்தவர் மயில்வாகனன்(வயது 53). சாரம் கிராம உதவியாளராக பணிபுரிந்து வந்த இவர். நேற்று மாலை மொபட்டில் ஒலக்கூர் சென்று சாப்பாடு வாங்கிவிட்டு மீண்டும் சாரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த கார் அவரது மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மயில்வாகனன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story