மறியலில் ஈடுபட முயன்ற கிராம மக்கள்


மறியலில் ஈடுபட முயன்ற கிராம மக்கள்
x

கோபால்பட்டி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

திண்டுக்கல்

கோபால்பட்டி அருகே கணவாய்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கோட்டைகாரன்பட்டி கிராமம் உள்ளது. இங்கு 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் குடிநீர் வினியோகம் முறையாக இல்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் திண்டுக்கல்-நத்தம் சாலையில் ஒத்தக்கடை என்னுமிடத்தில் திரண்டு வந்தனர். அவர்கள் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்த சாணார்பட்டி போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன், கணவாய்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நிஷா, ஊராட்சி செயலர் வெற்றிவேந்தன் ஆகியோர் நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story