மீன், இறைச்சி விற்பனை செய்ய சந்தை அமைத்து தர வேண்டும்


மீன், இறைச்சி விற்பனை செய்ய சந்தை அமைத்து தர வேண்டும்
x

திருமருகலில் மீன், இறைச்சி விற்பனை செய்ய சந்தை அமைத்து தர வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி;

திருமருகலில் மீன், இறைச்சி விற்பனை செய்ய சந்தை அமைத்து தர வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இறைச்சி விற்பனை

நாகை மாவட்டம் திருமருகல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீன், இறைச்சி உள்ளிட்டவைகள் விற்பனை செய்ய இடம் இல்லாமல் வியாபாரிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். விற்பனை செய்ய இடம் இல்லாததால் சாலையோரங்களில் வைத்து வியாபாரம் செய்யும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதனை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

சந்தை

இதைத்தொடா்ந்து நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை,வருவாய்த்துறை ஆகிய துறை அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால் மீன் மற்றும் இறைச்சி விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீன், கோழி, ஆட்டு இறைச்சி ஆகியவற்றை விற்பனை செய்ய திருமருகலில் சந்தை அமைத்து தர வேண்டும் என வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story