மோகனூர் அருகே குழாய் உடைந்து சாலையில் வீணாகிய குடிநீர்


மோகனூர் அருகே  குழாய் உடைந்து சாலையில் வீணாகிய குடிநீர்
x

மோகனூர் அருகே குழாய் உடைந்து சாலையில் வீணாகிய குடிநீர்

நாமக்கல்

மோகனூர்:

மோகனூர் அருகே ஒருவந்தூர் காவிரி ஆற்றில் இருந்து மோகனூர், வளையப்பட்டி வழியாக பட்டணம், சீராப்பள்ளி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு பெரிய குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை வளையப்பட்டி சாலையில் உள்ள மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே செல்லும் ஒரு குழாய் உடைந்தது. இதனால் குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறி வீணாகியதோடு சாலையில் பெருக்கெடுத்து ஓடி வீடுகளுக்குள் புகுந்தது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு சென்ற அதிகாரிகள் குழாய் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


Next Story