ரூ.5½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்


ரூ.5½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
x

சிவகங்கையில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.5 லட்சத்து 52 ஆயிரத்து 900 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

சிவகங்கை

சிவகங்கையில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.5 லட்சத்து 52 ஆயிரத்து 900 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர், மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட பல்ேவறு கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. அதில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

நலத்திட்ட உதவிகள்

இந்த கூட்டத்தில், பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் 25 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 52 ஆயிரத்து 900 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சிவராமன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் .காமாட்சி உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story