மனைவியை தாக்கி நகை பறிப்பு - போலீஸ்காரர் கனகராஜ் சிறையில் அடைப்பு
ராமநாதபுரத்தில் மனைவியை தாக்கி நகை பறித்த வழக்கில் போலீஸ்காரர் கனகராஜ் சிறையில் அடைக்கப்பட்டார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கோடரியேந்தல் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். மதுரை பட்டாலியன் போலீசாக பணியாற்றி வருகிறார்.
இவர் தனது மனைவியான ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் நிலைய ஏட்டாக பணியாற்றி வரும் முருகவள்ளியை தாக்கி அவர் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு சென்று விட்டாராம்.
இது தொடர்பாக ராமநாதபுரம் நகர் போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரிக்க வருவதை அறிந்த இவர் அரசு ஆஸ்பத்திரியில் தன்னை மனைவி குடும்பத்தினர் தாக்கிவிட்டதாக கூறி உள் நோயாளியாக அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை முடிந்து போலீஸ்காரர் கனகராஜ் இன்று நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு அவரின் உத்தரவின்பேரில் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story