மனைவி தீக்குளித்து சாவு


மனைவி தீக்குளித்து சாவு
x

மனைவி தீக்குளித்து இறந்தார்.

திருச்சி

திருச்சி திருவானைக்காவல் வெள்ளிதிருமுத்தம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மனைவி ஜெயலலிதா (வயது 30). சம்பவத்தன்று செல்வகுமார் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெயலலிதா உடலில் மண்எண்ணெயை ஊற்றி, கணவரை மிரட்டுவதற்காக தீக்குச்சியை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாரதவிதமாக அவரது உடலில் தீப்பிடித்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வகுமார் அவரை காப்பாற்ற முயன்றார். இதில் அவரும் காயம் அடைந்தார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி இறந்தார். செல்வக்குமார் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story