பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
தஞ்சை அருகே பெண்ணை அரிவாளால் வெட்டிய கணவா் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர்
வல்லம்;
தஞ்சையை அடுத்துள்ள வல்லம் புதூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் புஷ்பநாதன் (வயது45). இவருடைய மனைவி ஜெயலலிதா(37). புஷ்பநாதனுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் கணவன்- மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த புஷ்பநாதன் அரிவாளை எடுத்து தனது மனைவி ஜெயலலிதாவின் காலில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ஜெயலலிதாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் புஷ்பநாதன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story