வீட்டில் கள்ளச்சாவி போட்டு 8 பவுன் நகை திருடிய பெண் கைது


வீட்டில் கள்ளச்சாவி போட்டு 8 பவுன் நகை திருடிய பெண் கைது
x

வீட்டில் கள்ளச்சாவி போட்டு 8 பவுன் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை குபேர நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் லட்சுமி (வயது 48).

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவனந்தல் கிராமத்தில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் அன்று மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு திறக்கப்பட்டு பீரோவில் இருந்த 8 பவுன் நகைகள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசில் லட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் அதே பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயந்தி என்பவரிடம் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் லட்சுமி வீட்டின் பூட்டை கள்ளச்சாவியில் திறந்து நகைகளை திருடிச்சென்றது தெரிந்தது.

இதையடுத்து ஜெயந்தியை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து நகைகளை மீட்டனர்.


Related Tags :
Next Story