ரெயில் மோதி பெண் பலி

அரக்கோணத்தில் ரெயில் மோதி பெண் பலியானார்.
அரக்கோணம் பாப்பான்குளம் பகுதியை சேர்ந்தவர் அப்துல்லா. கூலி தொழிலாளி. இவரது மனைவி ஷர்மிளா (வயது 30). இவர் நேற்று காலை ஜெய்பீம் நகர் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்தவழியாக வந்த ரெயில் மோதியதில் ஷர்மிளா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன் மற்றும் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், ஷர்மிளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





