ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

ஜாதகம் பார்த்துவிட்டு திரும்பிய போது சக்கரத்தில் சேலை சிக்கியதால் ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த பெண் பலியானார்.
ஜாதகம் பார்த்துவிட்டு திரும்பிய போது சக்கரத்தில் சேலை சிக்கியதால் ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த பெண் பலியானார்.
ஜாதகம் பார்க்க...
முசிறியை அடுத்த பூசாரிபட்டி மேல தெருவை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவருடைய மனைவி ராஜகுமாரி (வயது 50). இவரும், இவரது மருமகள் மீனா (28) என்பவரும் ஸ்கூட்டரில் பள்ளி நத்தம் கிராமத்தில் ஒரு ஜோதிடரிடம் ஜாதகம் பார்க்க சென்றனர். பின்னர் மீண்டும் ஸ்கூட்டரில் ஊருக்கு திரும்ப வந்து கொண்டிருந்தனர். ஸ்கூட்டரை மீனா ஓட்டி வந்தார். அய்யாற்று அருகில் வந்து கொண்டிருந்த போது, ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்திருந்த ராஜகுமாரியின் சேலை சக்கரத்தில் சிக்கியது.
சாவு
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ராஜகுமாரி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






