மின்சாரம் தாக்கி பெண் சாவு


மின்சாரம் தாக்கி பெண் சாவு
x

கலவை அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தார்.

ராணிப்பேட்டை

கலவை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த சென்னசமுத்திரம் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரின் மனைவி மங்கை (வயது 40). இவர் வீட்டில் உள்ள மின்மோட்டாரை இயக்கி அருகில் உள்ள குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றபோது, மின்கசிவால் மின்சாரம் தாக்கியது. மங்கையை அங்கிருந்தவர்கள் மீட்டு கலவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், மங்கை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

இதுகுறித்து கலவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணமூர்த்தி, பிரபாகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி உயிரிழந்த மங்கைக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.


Related Tags :
Next Story