பெண் மாயம்


பெண் மாயம்
x

பெண் மாயம் ஆனார்.

கரூர்

கரூர் கோயம்பள்ளி அருகே உள்ள செல்வி பாளையத்தை சேர்ந்தவர் ஜோதிமணி (வயது 39). கல்யாண புரோக்கர். இவருக்கும், ராமசாமி என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் ஜோதிமணி திடீரென மாயமானார். இதையடுத்து உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஜோதிமணியின் உறவினர் நர்மதா கொடுத்த புகாரின்பேரில் வாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரூபி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story