கூடலூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


கூடலூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

கூடலூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

தேனி

கூடலூர் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டி இந்திரா காலனியை சேர்ந்த மச்சக்காளை மகன் மலைச்சாமி (26). கூலித்தொழிலாளி. இவரது மனைவி விவிதா (21). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது மலைச்சாமி மனைவி மற்றும் குழந்தைகளுடன் சுருளிப்பட்டி பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் வசித்து வருகிறார். மலைச்சாமி கடந்த 6 மாதமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை.

இதனால் மனமுடைந்த அவர் நேற்று கருநாக்கமுத்தன்பட்டியில் உள்ள தனது தந்தை வீட்டு குளியலறையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து உடனடியாக அவரது தந்தை மச்சக்காளை மற்றும் உறவினர்கள் மலைச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.


Next Story