கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி


கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
x

கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.

கரூர்

கரூர் மாவட்டம் சேங்கல் அருகே உள்ள பாப்பைம்பாடி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 40), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கரூரில் உள்ள ஒரு மருத்துவமனை கட்டிடத்தின் மாடியில் சுவர் இடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மாடியிலிருந்து கீழே தவறி விழுந்தார். இதில், பலத்த காயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story