மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
x

தேவூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.

சேலம்

தேவூர்:-

தேவூர் அருகே புள்ளாக்கவுண்டம்பட்டி கீழூர் பகுதியை சேர்ந்தவர் செங்கோடன். இவருடைய மகன் பரமேஸ்வரன் (வயது 39), வெல்டிங் தொழிலாளி. இந்த நிலையில் நேற்று குமாரபாளையம் அருகே புளியம்பட்டி பகுதியில் பரமேஸ்வரன் மற்றும் மணிகண்டன், தமிழ்மணி ஆகியோர் டிராக்டருக்கு வெல்டிங் வேலை செய்தனர். பரமேஸ்வரன் டிராக்டரை பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மின்சாரம் தாக்கியதில் பரமேஸ்வரன் கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானது குறித்து, தேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story