சரக்கு வேன் மோதி தொழிலாளி பலி


சரக்கு வேன் மோதி தொழிலாளி பலி
x

பழனி அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதி தொழிலாளி பலியானார்.

திண்டுக்கல்

பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 20). கூலித்தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் மதன்குமார் (19), இளங்கோ (17) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் பழனியில் இருந்து சிவகிரிப்பட்டி நோக்கி சென்றார்.

பழனியாண்டவர் கல்லூரி அருகே வந்தபோது எதிரே வந்த சரக்குவேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மதன்குமார், இளங்கோ ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பழனி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பின்னர் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக 2 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாஸ்கரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story