ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை


ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
x

குளித்தலையில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்

குளித்தலை - மணப்பாறை ரெயில்வேகேட் அருகே 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு உடல் சிதைந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதைப்பார்த்த அந்தப் பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் கரூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து அங்கு வந்த ரெயில்வே போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து விசாரித்தபோது ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தவர் குளித்தலை பழையகோர்ட் தெருவை சேர்ந்த தஸ்தஹீர் (வயது 31) என்பதும் இவர் குளித்தலை காவிரி நகர் பகுதியில் போட்டோ பிரேம் செய்யும் கடை வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் இவர் கடந்த ஒரு வார காலமாக தனது கடையை திறக்காமல் இருந்துள்ளார். மேலும் பள்ளிவாசலுக்கு செல்வதாக கூறிவிட்டு இவர் வீட்டில் இருந்து சென்றுள்ளார். இந்தநிலையில் இவர் எதற்காக ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து கரூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story