5-ந்தேதி கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அ.தி.மு.க. விருப்ப மனு அவகாசம் நாளையுடன் நிறைவு


5-ந்தேதி கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அ.தி.மு.க. விருப்ப மனு அவகாசம் நாளையுடன் நிறைவு
x
தினத்தந்தி 2 March 2021 1:58 AM GMT (Updated: 2 March 2021 1:58 AM GMT)

5-ந்தேதி கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அ.தி.மு.க. விருப்ப மனு அவகாசம் நாளையுடன் நிறைவு எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு.

சென்னை, 

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் விருப்பமனு வினியோகம் கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. விருப்ப மனு வினியோகம் வருகிற 5-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் விருப்ப மனு அவகாசம் 3-ந்தேதியுடன் (நாளை) நிறைவடைகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஏப்ரல் 6-ந்தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் கால அட்டவணை வெளியிட்டுள்ள நிலையில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு கோரும் கட்சியினருக்கு 3-ந்தேதி (நாளை) வரை மட்டுமே விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் அனைத்து விண்ணப்ப படிவங்களையும் பூர்த்தி செய்து அன்றைய தினமே மாலை 5 மணிக்குள் கண்டிப்பாக திரும்ப ஒப்படைக்க வேண்டும். இக்காலக்கெடு எக்காரணத்தை கொண்டும் நீடிக்கப்பட மாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story