மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் 40 தொகுதிகள் அறிவிப்பு


மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் 40 தொகுதிகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 March 2021 1:07 PM GMT (Updated: 12 March 2021 1:46 PM GMT)

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் 40 தொகுதிகளின் பட்டியலை சரத்குமார் வெளியிட்டார்.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் தலைமையிலான மக்களின் முதல் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 இடங்கள், இந்திய ஜனநாயக கட்சிக்கு 40 இடங்கள், மக்கள் நீதி மய்யத்துக்கு 154 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் இதுவரை 110 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் 40 தொகுதிகளின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் சரத்குமார் வெளியிட்டார். அதன்படி ச.ம.க. போட்டியிடும் தொகுதிகள்;-

துறைமுகம், உத்திரமேரூர், அரக்கோணம்(தனி), சோளிங்கர், ஆற்காடு, வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, போளூர், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், ஆத்தூர்(தனி), சங்ககிரி, திருச்செங்கோடு, அந்தியூர், கிருஷ்ணராயபுரம்(தனி), லால்குடி, கடலூர், சிதம்பரம், சீர்காழி(தனி), திருத்துறைப்பூண்டி(தனி), சிவகங்கை, மதுரை தெற்கு, பெரியகுளம்(தனி), ராஜபாளையம், திருச்செந்தூர், விருதுநகர், விளாத்திகுளம், தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம்(தனி), வாசுதேவநல்லூர்(தனி), தென்காசி, ஆலங்குளம், நெல்லை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய தொகுதிகளில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிட உள்ளதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இந்த 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Next Story