வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஹேக் செய்ய முடியாது- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புகளே இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறி உள்ளார்.
சென்னை:
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியதாவது:-
மே 2-ம் தேதி காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புகளே இல்லை. வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஹேக் செய்ய முடியாது.அதற்கான வாய்ப்புகளும் குறைவு.
அது கால்குலேட்டர் போல் தான் செயல்படும்.எந்த சிக்னல் கொண்டும் அதை இயக்க முடியாது என கூறினார்.
இன்று மதியம் நடக்க இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிகாட்சி மூலம் சாகு பங்கேற்க உள்ளார்.
Related Tags :
Next Story