மே.வங்காளம்: திரிணாமூல் காங்.- 200-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை, தொண்டர்கள் கொண்டாட்டம்


மே.வங்காளம்: திரிணாமூல் காங்.- 200-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை, தொண்டர்கள் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 2 May 2021 7:16 AM GMT (Updated: 2 May 2021 7:16 AM GMT)

மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த மாநில சட்டசபைக்கு, எட்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை  நடைபெற்று வருகிறது.  

வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் பின்னடைவை சந்தித்தார்.

எனினும், மற்ற இடங்களில் பாஜகவைக் காட்டிலும் திரிணாமூல் காங்கிரஸ் கூடுதல் இடங்களில் முன்னிலை பெற்றது. தற்போதைய நிலவரப்படி திரிணாமூல் காங்கிரஸ் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 88 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.  இதனால், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.  

திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி முகம் காட்டினாலும் மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்து இருப்பது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story