பிரதமர் மோடி மூத்த அமைச்சர்கள் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி,
நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலை மக்களின் கடும் அதிருப்தியை சம்பாதித்து வருகிறது. பெட்ரோல் விலையை போல வாகன ஓட்டிகளின் வேதனையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வரும் சூழ்நிலையிலும், பெட்ரோல்-டீசல் விலை குறைந்தபாடில்லை. மாறாக ஒவ்வொரு நாளும் பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இதுவரை இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் மட்டும் 12 சதவீதமாக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது.
இந்தநிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, இந்திய ரூபாயின் வீழ்ச்சி, பொருளாதார சூழல், ஏற்றுமதி, உற்பத்தித்துறை குறித்து பிரதமர் மோடி மூத்த மந்திரிகள், அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசு பொறுப்பில்லை என்று பாஜக கூறுவது இந்த ஆண்டின் மிகப் பெரிய நகைச்சுவை என காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். #BharathBandh