சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி பொதுமக்கள், போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
ஆமதாபாத்,
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் வஸ்த்ராபூர் இணைப்பு சாலையில் நேற்று சுமார் 100 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஒன்று கூடினர். அவர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த போலீசார் மற்றும் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது திடீரென கண்மூடித்தனமாக கற்களை வீசி அவர்கள் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த அட்டூழியத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களில் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி இருப்பவர்களை தேடும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மெரினா கடற்கரையை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறப்பது குறித்து வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்துக்குள் முடிவெடுக்கப்படும் என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மேலூர் அருகே மேலவளவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் மின்கம்பங்கள் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
வசந்தகுமார் எம்.பி.யின் மறைவு, சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், குமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில், வசந்தகுமாரின் படம் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.