முதல்-மந்திரிகள் மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக் ஆகியோருடன் அமித்ஷா தொலைபேசியில் பேசினார். உம்பன் புயல் தாக்குதலை சமாளிக்க மத்திய அரசு உதவும் என்று உறுதி அளித்தார்.
புதுடெல்லி,
வங்காள விரிகுடாவில் உம்பன் புயல், நேற்று முன்தினம் அதிதீவிர புயலாக உருவெடுத்தது. அந்த புயல், மேலும் தீவிரமடைந்து, இன்று பிற்பகலில் மேற்கு வங்காளத்தின் டிகாவுக்கும், வங்காளதேசத்தின் ஹடியா தீவுக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அப்போது, மணிக்கு 195 கி.மீ. வேகம் வரை புயல் வீசும் என்று தெரிகிறது.
இதனால், மேற்கு வங்காளத்தின் கரையோர மாவட்டங்களில் பலத்த மழை கொட்டுவதுடன், பெருத்த சேதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அண்டை மாநிலமான ஒடிசாவின் கடலோர பகுதிகளிலும் பாதிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
மேற்கு வங்காளத்தில் புயல் நிலவரம் குறித்து ஆய்வு நடத்தினார். புயலால் உண்டாகும் சூழ்நிலையை சமாளிக்க சாத்தியமான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று அமித்ஷா உறுதி அளித்தார்.
இதுபோல், ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குடன் அங்குள்ள நிலவரத்தை கேட்டறிந்தார்.
மத்திய அரசு தேவையான எல்லா உதவிகளையும் செய்யும் என்று தெரிவித்தார்.
ன்கள பணியாளர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மேற்கு வங்காள மாநில மக்களுக்கும் போதுமான அளவு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்று மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் இளைஞர் நலத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் லக்ஷ்மி ரத்தன் சுக்லா ராஜினாமா செய்து உள்ளதால் மம்தா பேனர்ஜி அரசுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
உண்மைகளை திரித்து பிரதமர் மோடி மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார் அரசியல் காரணங்களுக்காக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை தெரிவிக்கிறார்கள் என மம்தா பானர்ஜி கூறினார்.