மனிதர்களின் வியர்வையை வைத்து கொரோனா நோயாளிகளை கண்டறியும் மோப்ப நாய்கள்


மனிதர்களின் வியர்வையை வைத்து கொரோனா நோயாளிகளை கண்டறியும் மோப்ப நாய்கள்
x
தினத்தந்தி 16 July 2020 8:16 AM GMT (Updated: 16 July 2020 8:16 AM GMT)

மனிதர்களின் வியர்வையை வைத்து கொரோனா நோயாளிகளை மோப்ப நாய்கள் கண்டறிகின்றன.

சிலி

சிலி நாட்டில் கொரோனா பாதிப்பு உடையவர்களை கண்டறிய மோப்ப நாய்களுக்கு அந்நாட்டு போலீசார் பயிற்சி அளித்து வருகின்றனர்.பொதுவாக போதைப்பொருட்கள் மற்றும் வெடிபொருட்களைக் கண்டறிய அல்லது காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்தப்படும் நான்கு மோப்ப நாய்களுக்கு பயிற்சியளிப்பதாக சிலி போலீசார் தெரிவித்துள்ளனர்.

வைரசுக்கு வாசனை இல்லை என்றாலும், அது உடலில் ஏற்படுத்தும் வேதியியல் மாற்றத்தால் மக்களின் வியர்வையில் வித்தியாசமாக வாசனை ஏற்படுகிறது என்று இத்திட்டத்தின் கால்நடை தொற்றுநோயியல் பேராசிரியர் பெர்னாண்டோ மார்டோன்ஸ் தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதத்திற்குள் நாய்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும், எனவே ரெயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் ரோந்து செல்ல முடியும் என தெரிவித்துள்ளார்.

Next Story